காளஹஸ்தி அருகே லாரியுடன் மினி வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : உடல் நசுங்கி 4 பேர் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 1:54 pm
Andhra Accident -Updatenews360
Quick Share

ஆந்திரா : காளகஸ்தி அருகே லாரி,மினி வேன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் மரணமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டையிலிருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்றுடன் எதிர்திசையில் வந்த லாரி இன்று அதிகாலை காளகஸ்தி அருகே பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் வேனில் பயணித்த நான்கு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மரணமடைந்தவர்கள் உடல்கள் காளஹஸ்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன. விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள காலகஸ்தி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 631

0

0