கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்… வீடியோ எடுத்து தொடர்ந்து டார்ச்சர் ; 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு

Author: Babu Lakshmanan
16 November 2022, 3:49 pm
Quick Share

பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்ததால், மனமுடைந்த 17 வயது சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய 17 வயதுடைய சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார்.

Student Gang rape - Updatenews360

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியிடம் மணிகண்டனின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்

புகாரின் அடிப்படையில் வாலிபரின் தந்தை, அவரது சித்தப்பா மகன் இருவரையும் கைகளத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, மனமுடைந்த சிறுமி கடந்த 3ம் ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை சேலம் மாவட்டம் ஆத்தூர் வீரகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர், சேலம் அரசு மருத்துவமனை முன்பு உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறும்போது, “எனது மகளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த எனது மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். எனவே, இறந்த என் மகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், இறந்த மகளின் உடலை வாங்க மாட்டோம், என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Views: - 457

0

0