குப்பைத் தொட்டியில் துண்டு துண்டாக கை கிடந்த சம்பவத்தில் புதிய திருப்பம் : ஆண் நபரின் விபரத்தை வெளியிட்டது காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2022, 11:02 am
Hand in Garbage - Updatenews360
Quick Share

கோவை துடியலூர் குப்பைத் தொண்டியில் கிடந்த ஆண் நபரின் இடது கை வழக்கில் துப்பு துலங்கியது.

கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை மட்டும் கண்டறியபட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. துடியலூர் ஆய்வாளர் மற்றும் 8 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் கண்டறியப்பட்ட கை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 39) என்பவரது என்று தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபு. அவரின் செல்போன் கடந்த 15″ஆம் தேதியில் இருந்து செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது

ஈரோடு போலீசாரும் இங்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது குப்பை தொட்டியில் கிடைத்தது கை பிரபுவின் கைதான் என்பதை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 305

0

0