சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : இளைஞரை செருப்பால் அடித்து பதிலடி கொடுத்த பெண்!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 10:53 am
Teasing
Quick Share

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : இளைஞரை செருப்பால் அடித்து பதிலடி கொடுத்த பெண்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்கு கிரி விதி வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவர் மகன் பாண்டி அடிவாரம் பகுதியில் தேங்காய் பல கடை வேலை பார்த்து வருகிறான்.

இவன் நேற்று இரவு அடிவாரம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அந்த பெண்ணே அவனை பிடித்து தர்ம அடி கொடுத்தும் ,செருப்பால் அடித்து அடிவாரம் போலீசில் ஒப்படைத்தனர்.

சாலையில் சென்ற பெண்ணை இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 229

0

0