சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் போலி நகைகளை வைத்து 3 கிலோ நகைகள் அபேஸ் : நகை மதிப்பீட்டாளர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 6:00 pm
Central Bank Of India Fraud - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் போலி நகைகளை வைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 67 லட்சம் ரூபாய் கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்

கோவை ஆவாரம்பாளையம் சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றி நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தவர் கார்த்திக் (வயது 35). இவர் பல்வேறு தருணங்களில் நகைகளை பொதுமக்கள் அடகு வைத்த போது, அந்த நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்து மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விசாரித்த போது 3819 கிராம் தங்க நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து கார்த்திக் மீது வங்கி மேலாளர் ஜெய்ராம் என்பவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 609

0

0