ரெண்டே ரெண்டு மாவட்டம்தான்… மத்தபடி எல்லாம் ஓகேதான்… தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்

Author: Babu Lakshmanan
14 March 2022, 8:56 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 86பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி, கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது, 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 996ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,024 ஆக அதிகரித்துள்ளது. இன்று 204 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேருக்கும், கோவையில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது.

Views: - 877

0

0