பட்டாசு குடோனில் திடீர் தீவிபத்து… சிதறிக் கிடந்த உடல்கள்… பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
29 July 2023, 1:18 pm
Quick Share

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி பட்டாசு மொத்த விற்பனை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி காட்டினாம்பட்டி கோயில் சாலையில் ரவி என்பவருடைய பட்டாசு கடையில் இன்று காலை 9 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பட்டாசு கடை உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ருத்தீஷ் உள்பட ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி , வெல்டிங் கடை உரிமையாளர்கள் இப்ராஹிம், இம்ரான் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

பட்டாசு கடையின் அருகில் உள்ள ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்த சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்தில் ஆங்காங்கே உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. உயிரிழந்த 8 பேரில் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Views: - 302

0

0