பார் நடத்தி வந்த திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிக்கொலை ; 4 பேர் கொண்ட கும்பல் எஸ்கேப்.. போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
24 May 2024, 1:26 pm
Quick Share

திண்டுக்கல்லில் தி.மு.க பிரமுகர் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (வயது 60.) இவர் தற்பொழுது திண்டுக்கல் அடுத்துள்ள வேடப்பட்டியில் வசித்து வருகிறார். இவர் திமுக பிரமுகராவார். இவரது மனைவி நிர்மலா. இவர் முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக இருந்தார்.

மேலும் படிக்க: இது நமக்கு கெட்ட நேரம் ; வாதத்திற்கு மருந்துண்டு… பிடிவாதத்திற்கு மருந்தில்லை… அமைச்சரின் பேச்சால் பரபரப்பு!!!

இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்துகிறார். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் 2 குழந்தைகளும் வெளியூரில் படிக்கின்றனர்.

இந்நிலையில் மாயாண்டி ஜோசப், மட்டும் தனியாக வேடப்பட்டியில் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மாயாண்டி ஜோசப், யாகப்பன் பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து டூவீலரில் வேடப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்றார். அப்போது, இவர் வருகைக்காக முன்னரே காத்திருந்த மர்ம கும்பல் எதிர் திசையில் டூவீலரில் வந்து மாயாண்டி ஜோசப், மீது மோதினர். நிலை தடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பியது.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தாலுகா போலீசார் மாயாண்டி ஜோசபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயாண்டி ஜோசப் மீது கொலை உட்பட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு காரணத்திற்காக கொலை நடைபெற்றதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 151

0

0