இபிஎஸ்-ஐ வரவேற்க திரண்ட அதிமுகவினர்… இரு கோஷ்டிகளிடையே வாக்குவாதம் ; தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 10:05 am
Quick Share

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திரண்ட அதிமுகவினரிடையே எழுந்த வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.

சீனிராஜ் என்பவர் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் ஹேட்டல் நடத்தி வருகிறார். இவர் முதன்முதலில் மாநில MGR இளைஞர் துணை செயலாளராக இருந்து உள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆனபோது, எடப்பாடியில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளார்.

பின்பு, இவர் அதிமுகவில் இருந்து அ.ம.மு.க கட்சிக்கு சென்று உள்ளார். பின்பு இவரை அதிமுகவை விட்டு நீக்கி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி உள்ளனர். திரும்பவும் அதிமுக கட்சிக்கு வருவதற்கு இன்று அதிமுக கரை வேஷ்டியுடன் சீனிராஜ் மற்றும் அவரது உதவியாளர் காசி இருவரும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இவர் எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி இன்று பிரபல பத்திரிக்கையில் கடம்பூர் ராஜுவின் படத்தை போட்டு விளம்பரம் செய்து உள்ளார். இன்று விமான நிலையம் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கடம்பூர் ராஜு வரும்போது – சீனிராஜ் அவரும் அவரது உதவியாளர் சால்வே வைத்து நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது, கடம்பூர் ராஜுவின் ஆதரவாளர்கள், “கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபர், கட்சியைக் காட்டிக் கொடுத்த நபர், நீ வரக்கூடாது,” என்று சீனிராஜை ஒருமையில் பேசி ஜந்து நிமிடம் வாக்குவாதம் சண்டை ஏற்பட்டு இருக்கும் நிலையில், காவலர்கள் தடுத்து நிறுத்தி விலக்கிவிட்டனர். இதனால் இன்று எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 262

0

0