பல ஆண்களுடன் பழக்கம்… பல லட்சம் சுருட்டி திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் : செவிலியரால் சிக்கும் அரசியல் புள்ளிகள்?!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2023, 5:04 pm
Illegal Affair - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூவக்காபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர் ஜெனிஃபர் டார்த்தி (வயது 30). இவருடைய கணவர் ஏசுராஜ் (வயது 36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் திமுக பிரமுகர் தினேஷ்பாபு (வயது 30) துபாயில் நல்ல ஊதியத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பிறகு திருப்பூர் வந்து கார்மெண்ட்ஸ் தொழில் செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தடுப்பூசி போடும் போது செவிலியராக பணியாற்றும் ஜெனிபர் டார்த்தி என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

இதையடுத்து நெருங்கி பழகி வந்தோம் ஜெனிபர் டார்த்தி தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தன்னை திண்டுக்கல்லில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றார் அங்கு இருவரும் மோதிரங்கள் மாற்றி திருமணம் செய்துள்ளோம் என்றும் பதிவு செய்யலாம் என்ற போது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மறுத்துவிட்டார்.

இதையடுத்து சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார்கள். தனக்கு முன்பே ஓபிஎஸ் அணி நகர் செயலாளர் ஷேக்பரீத்(39) என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

மேலும் செவிலியர் ஜெனிபர், திமுக பிரமுகர் தினேஷ் பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதுமட்டுமல்லாமல் சந்திரசேகர், சிவக்குமார், சுரேன் என பலருடன் நெருங்கி பழகி வந்தது தெரியவந்தது.

இருப்பினும் ஜெனிபர் மீதுள்ள காதலால் வேறுஇடத்திற்கு சென்றுவிட்டால் பிரச்னை தீரும் என நினைத்த தினேஷ், ஜெனிபருக்கு பணியிடமாறுதல் வாங்கிக் கொண்டு திருப்பூர் மாவட்டம் வந்து குடியேறியுள்ளார்.

அங்கு சென்றும் பல ஆண் நண்பர்களுடன் பேசி உள்ளதாகவும் கூறுகிறார் இதுகுறித்து கேட்டால் பணிநிமித்தமாக சென்றதாகக் கூறி சமாளித்துள்ளார்.

கடைசியாக ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவருடன் நெருங்கி பழகியது தெரியவந்தது. அவருடன் எடுத்த செல்பி படங்களை பார்த்து அதிர்ந்து போன தினேஷ் தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெனிபரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெனிபவர் போலீஸாரிடம் தினேஷ் மீது புகார் அளித்தார். காவல் நிலையத்தில் அழைத்தன் பேரில் அங்கு சென்ற போது குடிபோதையில் தினேஷ் இருந்ததால் அங்கும் பிரச்னையாகிவிட்டது

இதற்கிடையில் தினேஷ் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது காரை வைத்து இடித்து விட்டு ஜெனிபர் டார்த்தி தப்பி சென்றார். இதையடுத்து இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே ஜெனிபர் டார்த்தியின் முதல் கணவர் ஏசுராஜ் ஒட்டன்சத்திரம் போலீஸாரிடம் பல ஆண் நண்பர்களுடன் தனது மனைவி பழகி கொண்டு தன்னைவிட்டு பிரிந்துவிட்டதாக புகார் அளித்தார்.

அதே போல ஓபிஎஸ் அணியின் பிரமுகர் ஷேக் பரீத் மனைவி சப்னாபேகம் தனது கணவனை மீட்டுத் தருமாறு சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தார்

ஜெனிபர் டார்த்திக்கு கூட்டுறவு சொசைட்டியில் இருந்த கடன் அவரது குழந்தைகளுக்கான மருத்துவச் செலவு என மொத்தம் 6 லட்சத்து 30000ரூபாய் செலவு செய்தேன்.

இதுமட்டுமில்லாத குடும்பம் நடத்த பல லட்ச ரூபாய் செய்துள்ளேன் என்னை போல யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் நான் இழந்த பணத்தை மீட்டு தரும்படியும் மோசடி செய்த ஜெனிபர் டார்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன் அதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

மேலும் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் இறந்த குழந்தைகளுக்கு அரசு தரும் பணத்தை இவர் திருடுவதை அறிந்து அதை முதல்வர் கவனத்திற்கு புகார் அளித்தேன்.

தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் விசாரணை அதிகாரி வராமல் வேறொரு விசாரிப்பது சந்தேகம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இந்தப் பெண்ணால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் பலரின் மனைவிகள் புலம்புவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

ஜெனிபர் டார்த்தி மொபைலை முறையாக ஆய்வு செய்தால் அரசு அதிகாரிகள் காவல்துறையினர் என பல்வேறு நபர்கள் சிக்குவார்கள் என்று அவருடைய கள்ளக்காதலன் பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 438

0

0