இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. 20 வயது இளைஞனை வீட்டுக்கு அழைத்த 33 வயது இன்ஸ்டா குயின்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
31 October 2023, 6:51 pm
Quick Share

திருப்பத்தூர் அருகே கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞரை வீட்டுக்கு அழைத்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33). இன்ஸ்டாகிராமுக்கு அடிமையான இவர், ரீல்ஸ்களை போடுவதை தினமும் வாடிக்கையாக வைத்துள்ளார். நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகதீஸ்வரர் (20), அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார்.

இந்த நிலையில், பிரகதீஸ்வரர் ஒரு வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன், உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக, கணவனுக்கு தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 27ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பிரதீஸ்வரரை வரவழைத்து உள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, பிரகதீஸ்வர் நதியாவை பார்த்து உன்னுடைய கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் தங்க நகையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு, தாலி சரடு மட்டும் தங்கம் என நதியா கூறியுள்ளார்.

அப்போது, திடீரென கழுத்தில் இருந்த தாலி சரடை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று பிரகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த நதியாவின் மூன்றரை பவுன் தங்கத் தாலி சரடை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு வீட்டிற்கு வரவழைத்த வாலிபர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 989

0

0