இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் வெட்டிக் கொலை : முன்விரோதம் காரணமா..? என போலீசார் விசாரணை
Author: Babu Lakshmanan17 August 2021, 5:29 pm
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சூரப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ரமேஷ் (24). இவர் கரூரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று இரவு ரமேஷ் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் புளியம்பட்டி பயணியர் நிழற்குடை அருகே வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மற்றும் கை பகுதியில் வெட்டப்பட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாகவும், அருகில் அவரது இரு சக்கர வாகனம் கிடந்த நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அரவக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு முத்துச்செல்வன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் ரமேஷ் என்பது தெரிய வந்த நிலையில், பின்னர் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
0
0