KCP Infra Limited – பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இடையே ரூ.100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!

Author: Babu Lakshmanan
13 July 2023, 8:55 pm
Quick Share

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் KCP Infra Limited நிறுவனம் கட்டுமானத் துறையில் பல ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முதற்கொண்டு சாலைகள், பாலங்கள் என அரசின் ஒப்பந்தங்களை எடுத்து, அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாக செய்து வருகிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் கட்டுமானத் தொழிலில் கால் பதித்து சாதனை படைத்து வரும் KCP Infra Limited , தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

அதாவது, KCP Infra Limited நிறுவனத்திற்கும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கும் இடையே சுமார் ரூ.100 கோடிக்கான வியாபார உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. KCP Infra Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மாநில நிர்வாகி கோவிந் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Views: - 255

0

0