கடைசி நேரத்தில் கவுந்தது திமுக.. தலைமறைவான காங்., பெண் கவுன்சிலர் இணைந்ததால் பேரூராட்சியை கைப்பற்றியது பாஜக!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 6:43 pm
Bjp Won - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தென்தாமரைகுளம் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து பாஜகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 4 வார்டுகளில் பாஜகவும், 3 வார்டுகளில் அதிமுகவும் ,3 வார்டுகளில் திமுகவினரும் ,4 வார்டுகளில் சுயேட்சை கவுன்சிலர்களும் , 1 வார்டில் காங்கிரஸ் கவுன்சிலரும் வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.க வும்-திமுக வும் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற மல்லிகா என்ற பெண் கவுன்சிலர் தலைமறைவானார் .

காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தலைமறைவானதால் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுக விற்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் கவுன்சிலர் வருகையை எதிர்பார்த்து பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு திமுகவினர் நேற்று திரண்டிருந்தனர் .

அப்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளவாய்சுந்தரம் ,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ,பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் புடைசூழ 4 பாஜக கவுன்சிலரும் , 3 அதிமுக கவுன்சிலரும் அவர்களுடன் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மல்லிகாவும் வந்தார்.

இதனால் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாஜக- திமுக நிர்வாகிகளுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இவ்வாறு பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக-பா.ஜ.க இடையே மல்லுக்கட்டு நடந்து வந்த நிலையில் நேற்று காங்கிரஸ் பெண் கவுன்சிலரான மல்லிகா ,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் .

பின்னர் அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையினை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வழங்கினார். பெண் கவுன்சிலர் மல்லிகா பா.ஜ.க வில் இணைந்ததால் தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் பதவியை பா.ஜ.க கைப்பற்றுவதில் ஏற்பட்டு வந்த சிக்கலுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

Views: - 1357

1

1