இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் காவலர் தற்கொலை ; அதிர வைக்கும் காரணம்..? மதுரையில் நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
21 September 2023, 9:47 pm
Quick Share

மதுரை ; ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் தேனூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறை பெண் காவலரான ஜெயலெட்சுமி என்பவர் தனது குழந்தைகளான பவித்ரா (11), காளிமுத்து (9) என்ற இரு குழந்தைகளுடன் மதுரை தேனூர் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமிக்கு திருச்சிக்கு பணிமாறுதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு பணியிடமாற்றம் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 364

0

0