‘நிச்சயம், திமுக வாக்குகளை இழக்கும்’.. மாரி செல்வராஜை கைது செய்யுங்க ; மாமன்னன் படத்திற்கு எதிராக கிளம்பிய போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
29 June 2023, 6:06 pm
Quick Share

இயக்குனர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாமன்னன் பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடித்து வெளியான மாமன்னன் திரைப்படம் இன்று திருநெல்வேலியில் நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக கூறி படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்தனர்.

படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் திருநெல்வேலி ராம் – முத்துராம் திரையரங்கு முன்பாக மாமன்னன் பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகத்தினர், அதன் நிர்வாகி பவானி வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்தை தடை செய்ய வலியுறுத்தியும், இயக்குனர் மாரி செல்வராஜை கைது செய்ய கோரியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக பவானி வேல்முருகன் கூறுகையில்:- தென் தமிழகத்தில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது மூலம் ஜாதி கலவரம் தூண்டப்படுகிறது. முதலமைச்சரே இதற்கு ஆதரவாக உள்ளது போல் தெரிகிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் குளத்தூர் வாக்குகளை இழக்கும் நிலை ஏற்படும், என்று தெரிவித்தார்.

முற்றுகை போராட்டம் காரணமாக காவல்துறை துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Views: - 451

2

4