‘நான் குடிகாரன் ஆனதுக்கு காரணமே அவன்தான்’… நண்பனை கட்டையால் அடித்து கொன்ற பிளம்பர் : விசாரணையில் பகீர்..!!

Author: Babu Lakshmanan
20 January 2023, 8:06 pm
Quick Share

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மையவாடியில் பிளம்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தூத்துக்குடி புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியைச் சார்ந்த சண்முகம் மகன் மகாராஜன் பிளம்பர் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக வீட்டை விட்டு பிரிந்த நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி விபத்தில் இறந்துள்ளார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், வீட்டை விட்டு பிரிந்து இவர் மது அருந்திவிட்டு மையவாடியில் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மேலும், இவரது உறவினரான தூத்துக்குடி ராஜீவ் நகர் 10வது தெருவை சார்ந்த சந்திரன் மகன் மாரிமுத்து என்பவரும் மது அருந்திவிட்டு மையவாடியில் படுத்து உறங்குவதை வழங்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றும் இருவரும் மது அருந்திவிட்டு அங்கு படுத்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மகாராஜனை, மாரிமுத்து அங்கு கிடந்த கட்டை மற்றும் கல்லால் தலையில் அடிக்க, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், காவல் நிலையத்தில் சரணடைந்து தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாரிமுத்துவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து நல்ல நிலையில் இருந்து வந்த போது, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும், தொடர்ந்து மது அருந்தி விட்டு தொழிலில் ஈடுபாடு காட்டாத காரணத்தினால் அனைத்தையும் இழந்துள்ளார்.

மேலும், தனது நிலைக்கு தனது உறவினர் பிளம்பர் மகாராஜன், அவரது அம்மா மூலம் செய்வினை செய்ததால், இன்று அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்ப்பட்டதாக கூறி இருவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அவ்வாறு மது அருந்திவிட்டு இருவரும் மையவாடியில் படுத்தபொழுது, மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்து மகாராஜனை கட்டையால் அடித்துக்கொன்றதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 329

0

0