மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம் : மனதை ரணமாக்கும் சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2023, 8:00 pm
Menyally Cahllenged Students - Updatenews360
Quick Share

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம் : மனதை ரணமாக்கும் சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

சிவகாசி அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.சி மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் பயிலும் மன நலம் பாதிக்கபட்ட மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அவல நிலை குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரனிடம் கேட்டபோது பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் இம்மானுவேல் என்பவர் தமக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததை மனதில் வைத்துக் கொண்டு பள்ளியின் பெயரை கலங்கப்படுத்தும் நோக்கில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் ஆசிரியர் இமானுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒழுங்கீன செயலில் ஆசிரியர் ஈடுபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Views: - 197

0

0