முட்டையில் கருப்பு மை… மழை வேற வந்திடுச்சு… மை அழிஞ்சிடுச்சு : அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமும்.. சர்ச்சையும்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 6:58 pm
gee
Quick Share

முட்டையில் கருப்பு மை… மழை வேற வந்திடுச்சு… மை அழிஞ்சிடுச்சு : அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமும்.. சர்ச்சையும்!!!

இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும், குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது…

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள ராஜாஜி பூங்கா முன்பு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு WALK FOR CHILDREN பேரணி நடைபெற்றது…

மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு WALK FOR CHILDREN பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில், காமராஜ் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக தூத்துக்குடி புதிய மாநகராட்சி வரை நடந்து சென்றனர்.

பின்னர், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து குழந்தைகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.. குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களை குறைக்க வேண்டும், குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டும், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என கவனம் செலுத்த வருகிறார்.

அழுகின முட்டை குறித்து பேசுகையில், அழுகின முட்டை விநியோகம் செய்தவர் 96க்கும் மேற்பட்ட முட்டைகளை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர்களுக்கு நோட்டிஸ் அளித்துள்ளோம்.. முட்டையை உணவு பாதுகாப்பு துறையினர் பரிசோதனை செய்தனர்..

தமிழ்நாடு அரசுக்கு முட்டை விநியோகம் செய்பவர் திங்கள் புதன், சனி அல்ல வெள்ளி ஆகிய மூன்று நாள் கொண்டு வருவர்.. அதில் கலர் வைக்க வேண்டும்.. ஏனென்றால் பழைய முட்டை உபயோக படுத்திவிட கூடாது என்ற காரணத்தால், ஆகவே, அன்று முட்டையில் கருப்பு கலர் வைத்து இருக்கிறார்கள்.. தமிழ்நாடு அரசு என முட்டையில் போடப்பட்டு இருந்தது.. அன்று மழை.. தார்பாய் இல்லாமல் வண்டி வந்துருக்கு..அப்போது கருப்பு மை உறிஞ்சி கருப்பு கலர் இறங்கி உள்ளது.. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியூட்டாச்சு..சிலர் எப்போதும் குற்றச்சாட்டு கண்டு பிடிக்கலாம் எனவும், இதனை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள். ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு அல்ல, சமூக நலன் முறையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நல்ல அவித்த தரமான முட்டை வழங்கப்படுகிறது என கூறினார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை தனது X தளப்பதிவில், முட்டை வழங்கியதற்கு நன்றி என்றும், பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய காலாவதியான முட்டைகள் வழங்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் டிஎம்டி கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த முட்டைகள் ஏன் மாசுபட்டன என்பதற்கான காரணம் நகைச்சுவைத் திரைப்படத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது போல இருக்கிறது. அவர் சொல்லும் பதிலில் லாஜிக் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

Views: - 391

0

0