2-வது திருமணத்திற்கு Ok.. ஆனா கண்டிஷன் போட்ட நாகசைத்தன்யா..!

Author: Rajesh
17 April 2022, 7:48 pm
Quick Share

சமந்தா – நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருடங்கள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீடீரென கடந்த ஆண்டு விவகாரத்தை அறிவித்தனர்.

விவகாரத்தபின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனா பெற்றோரிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் நாகசைத்தன்யா. அதாவது நடிகை வேண்டாம். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவிச்சு பொண்ணும் பார்த்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது..

Views: - 1142

24

15