கர்ப்பிணி மனைவியை பூரி கட்டையால் அடித்து கொலை ; தப்பிச்சென்ற வடமாநில இளைஞர் கைது‌!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 5:53 pm
Quick Share

திருப்பூர் ; திருப்பூரில் கர்ப்பிணி மனைவியை பூரி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருபவர் அணில் பவார் (25). மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவரது மனைவி ரேகா (27) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அம்மாபாளையம், கணபதி நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள தகர கொட்டகையில் வசித்து வருகின்றனர்.

மது போதைக்கு அடிமையான அணில் பவார் நேற்று இரவு மது போதையில் ரேகாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அணில் பவார் பூரிக்கட்டையால் ரேகாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் தலைப்பகுதியில் பலத்த காயம் அடைந்த ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, அணில் பவார் தனது இரண்டு குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இன்று காலை நீண்ட நேரமாக ரேகா குடும்பத்தினர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது, ரேகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து, திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ரேகாவை கொலை செய்த அவரது கணவர் அணில் பவார் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கரூர் சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, கரூர் போலீசார் உதவியுடன் கரூர் பேருந்து நிலையத்தில் வைத்து அணில் பவாரை போலீசார் பிடித்து திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 295

0

0