தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு… முக்கிய உத்தரவை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 7:37 pm
School Open - Updatenews360
Quick Share

தமிழ்நாட்டில் 6 -12ம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால், இன்றுக்குள் அனைத்து பள்ளிவளாகத்திலும் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி திறப்பையொட்டி, விடுமுறைக்கு சோந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக, இன்று சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதற்கிடையில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக, மொத்தம் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாம்.

Views: - 248

0

0