பிரபல ரவுடியை வீடுபுகுந்து வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்… வெளியானது சிசிடிவி காட்சி… போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
27 May 2022, 1:00 pm
Quick Share

புதுச்சேரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையை 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரவுடி சரத் என்கிற பொடிமாஸ் நேற்று விடியற்காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், கொலை செய்வதற்கு முன்பு மர்ம நபர்கள் அந்த வீட்டின் பின்புறமாக செல்வதும், கொலை செய்த பின்பு அவர்கள் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. பின்னர், கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 966

1

0