பிரசவத்தில் கதறி துடித்த கர்ப்பிணி.. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு தாயும், சேயும் சடலமாக வந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2023, 9:11 pm
Mother Baby Dead -Updatenews360
Quick Share

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு.இவர் டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி 38 வயதான சூரியகாந்தி இவர்களுக்கு 15 வயதில் ராகுல்,9 வயதில் சாதனா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 3வது முறையாக கர்ப்பமடைந்த சூரியகாந்தி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ள நிலையில் 3 வது குழந்தை 10 மாதம் நிறைவடைந்தும் பிரசவ வலி வராததால் கடந்த 20 ந்தேதி சூரியகாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்த போது ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது .


இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சூரியகாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் அதிகமான ரத்தப்போக்கு இருந்துள்ளது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .

இந்நிலையில் நேற்று சூரியகாந்தியின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய போது அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான சுணைப்புக நல்லூருக்கு வந்தது. கிராம மக்கள், உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் சூரியகாந்தியின் மகள் சாதனா துக்கத்தை தாங்க முடியாமல் அம்மா என்னை விட்டுட்டு போயிட்டியே என கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்குச் சென்ற தாயும் பெற்றெடுத்த சேயும் சுடலமாக வீடு திரும்பினர்.

பிரசவத்தில் தாயும் சேயும் சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 295

0

0