அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு.. பரபரப்பில் கோவை மாநகரம் : அலர்ட் ஆன போலீஸ்… கூடுதல் டிஜிபி அவசர ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 9:43 pm
Cbe Review - Updatenews360
Quick Share

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் கோவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவையில் சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இன்று தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் கோவை வந்தார்.

தொடர்ந்து அவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்
மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், சிறப்பு அதிரடி படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சுமார் 30 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின் அவர் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.

Views: - 379

0

0