‘அவன் மாட்டிக்கிட்டான்.. எங்களையும் மாட்டி விட்டான்’.. டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதலாக வாங்கிய டாஸ்மாக் ஊழியர் புலம்பல்..!!

Author: Babu Lakshmanan
10 June 2023, 9:06 am
Quick Share

அவன் மாட்டிக்கிட்டான், அதனால மாட்டி விட்டுட்டு போயிட்டான் என அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து பேசிய டாஸ்மாக் ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்கும் விவகாரம் தமிழக முழுவதும் பேசு பொருளாக மாறிவிட்டது. ஒவ்வொரு மதுபான கடைகளிலும் கூடுதலாக பத்து ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் வாங்கி சென்ற மது பிரியர்கள், தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகளில் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இருந்தாலும் டாஸ்மாக் ஊழியர்கள் இதையெல்லாம் சட்டை செய்வதில்லை. பத்து ரூபாய் பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கிக் கொண்டுதான் மது பாட்டில்களை கொடுக்கிறார்கள் என மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் திருநீர்மலை அடுத்த காமராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் வாடிக்கையாளரிடம் விற்பனையாளர் பத்து ரூபாய் அதிகம் கேட்ட பொழுது, அவர் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேள்வி கேட்ட வாடிக்கையாளருக்கு பதிலளித்த டாஸ்மாக் ஊழியர், “எம்ஆர்பி ரேட்ட எப்ப கண்டுபிடிச்சீங்க. இவ்வளவு நாளா எதுவும் கேட்காம வாங்கிட்டு போனீங்க, இப்ப ஒரு வாரமா கேள்வி கேக்குறீங்க. இது ஒன்னும் ஆர்லிக்ஸ், போர்ன் வீட்டா இல்ல.
பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா தான் கொடுக்கணும். அவன் மாட்டிக்கிட்டான். அதனால மாட்டி விட்டுட்டான்,” என அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து பேசுவது போல், டாஸ்மார்க் ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 345

0

0