புத்தாண்டு தினத்தில் திருப்பதியில் சுவாமி தரிசனம்… வேண்டுதல் குறித்து மனம் திறந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் !!

Author: Babu Lakshmanan
1 January 2024, 1:51 pm
Quick Share

புத்தாண்டு தினத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவருக்கு வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

கோவிலில் இருந்து வெளியில் வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “நாட்டு மக்கள் நலம், வளம் ஆகியவற்றுடன் வாழ அருள் புரிய வேண்டும் என்று புத்தாண்டு துவக்க நாளான இன்று ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்,” என்று கூறினார்.

Views: - 155

0

0