நடராஜர் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறி மாட்டிய கோவில் நிர்வாகம் : திருவண்ணாமலை கோவிலில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 6:47 pm
Temple
Quick Share

நடராஜர் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறி மாட்டிய கோவில் நிர்வாகம் : திருவண்ணாமலை கோவிலில் பரபரப்பு!

அண்ணாமலையார் திருக்கோயிலில் நடராஜர் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறியை மாட்டிய சம்பவம் பக்தர்கள் அதிர்ச்சி-இணையத்தில் வைரலாகும் காட்சி.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தாலமாகும் நினைத்தாலே முக்கிய அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திரு கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.

இந்த திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம், நவராத்திரி பத்து நாள் உற்சவம் மற்றும் சாமி புறப்படுதல் உன் கிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள மண்டபங்கள் மேற்கூரை உத்தரங்களில் பல்வேறு கலைநயம் மிக்க தொன்மை வாய்ந்த அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.

அழகிய ஓவியங்களை சிதைக்கும் வகையில்,மற்றும் பக்தர்கள் வசதிக்கு என திருக்கோயில் நிர்வாகம் பல்வேறு கோயில்களில் பல இடங்களில்கோயில் கோபுரங்களில்,திருக்கோவிலின் பதில் சுவற்றில் ஆணிகளை அடிப்பதும், உள்ளிட்ட பல்வேறு பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்ன பக்தர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக அலங்காரம் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள நடராஜர் ஓவியத்தின் முகத்தில் ஆணி அடித்து மின்விசிறி மாட்டியுள்ள சம்பவம் பக்தர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவது.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.பலவித கண்டனங்கள் எழுந்த நிலையில் இதனை அறிந்த கோவில் நிர்வாகம் தற்போது அவசர அவசரமாக மின்விசிறியை அகற்றியுள்ளனர்.

Views: - 448

0

0