இரவு 11 மணி முதல் காலை 5 மணி ஊரடங்கு தொடரும் : அக்.31 வரை ஊரடங்கை நீட்டித்தது புதுச்சேரி அரசு!!
Author: Udayachandran RadhaKrishnan15 October 2021, 6:25 pm
புதுச்சேரி : தற்போதுள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு வழக்கம்போல் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கடற்கரைச் சாலைகள், பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Views: - 499
0
0