மனைவியின் உயிரை பறித்த மின்வேலி.. அதிர்ச்சி தாங்காமல் விவசாயி எடுத்த விபரீத முடிவு ; அடுத்தடுத்து நடந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
7 April 2023, 2:33 pm
Quick Share

திருவள்ளூர் : பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்ததையடுத்து, விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் பொம்மராஜ்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் விவசாயி மேகநாதன் (57). இவரது மனைவி துளசி வயது (50) ஆகிய இருவருக்கும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மூன்று மகள்களுக்கும் திருமணம் முடிந்து அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயி இவர்களது இடத்தில் மர்மமான முறையில் மேகநாதன் சில காயங்களுடன் இறந்துள்ளதாகவும், அருகில் அவரது மனைவி துளசியும் இறந்துள்ளதாகவும் பொதுமக்கள் பள்ளிப்பட்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொதட்டூர்பேட்டை போலீசார், இருவரது பிரேதத்தையும் கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொதட்டூர்பேட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. மேகநாதன் தனது விவசாய இடத்திற்கு பன்றிகள் தாக்காமல் இருக்க மின்வெளி அமைத்துள்ளார். இதில் அவரது மனைவி துளசி சிக்கி உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாய மேகநாதன், தான் வைத்த மின்வெளியில் மனைவி இறந்ததால் கணவன் மேகநாதன் அதே பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

மனைவி உயரிழந்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 176

0

0