பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. கதவை திறந்து பார்த்த போது SHOCK : 3 சடலங்கள் மீட்பு..!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 8:41 am
Suicide
Quick Share

பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. கதவை திறந்து பார்த்த போது SHOCK : 3 சடலங்கள் மீட்பு..!

திண்டுக்கல் தாடிக்கொம்பு கள்ளிப்பட்டி ஆதிசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த டூ வீலர் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்துவபர் சீனிவாசன் 40. இவரது மனைவி மேனகா 36. இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஹிந்து பாகினி16, தான்ய ஸ்ரீ 12, என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மேனகாவும், அவரது உறவினர் ஒருவரும் தகாத உறவில் இருந்தனர்.

இதை தெரிந்து கொண்ட சீனிவாசன், அடிக்கடி மேனகாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களுக்கு முன் சீனிவாசனுக்கும் மேனகாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினர். தொடர்ந்து அடிக்கடி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மேனகா, இன்று மேனகா,தன் வீட்டில் மகள்களான ஹிந்துபாகினி, தான்யஸ்ரீ மூவரும் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

மேலும் படிக்க: ஒரே நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த கிராம மக்கள்.. விசாரணையில் சிக்கிய சிப்ஸ் தொழிற்சாலை.!!

தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் சீனிவாசனை,போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று மூவரின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உண்டா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Views: - 128

0

0