பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த பச்சை குத்தும் தம்பதி : ஆபாச வார்த்தைகளின் உச்சம்… பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2023, 7:18 pm
Fight - Udpatenews360
Quick Share

பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த பச்சை குத்தும் தம்பதி : ஆபாச வார்த்தைகளின் உச்சம்… பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு பயணிகள் நிழற்குடையில் மது போதையில் உட்கார்ந்து இருந்த பச்சை குத்தும் தம்பதிகளுக்கு இடையே சொந்தப் பிரச்சினை காரணமாக ஒருவருக்கொருவருக்கு தகராறு ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் பச்சை பசையாக பேசி கொண்டே தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே நிறைபோதையில் அமர்ந்திருந்த வடமாநில மது பிரியர் ஒருவர் சண்டையிட்ட தம்பதியினரை பார்த்துக் கொண்டு நைசாக எழுந்து கிளம்ப ஆரம்பித்தார்.

அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருந்த போது வடமாநிலத்தார் மீது மோத மோத மச மசனு நின்று கொண்டிருந்தார். திடீரென அந்த சண்டைக் காட்சிகளை படமெடுக்க ஆரம்பித்தார்

பின்புதமிழ்நாடு அரசுநிலைமையை பாருங்கஎன்றுஇந்தியில் பேச ஆரம்பிக்க பின்பு பேருந்து நிறுத்தத்தில் உள்ள அனைவரையும் வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.

அப்போது அங்கிருந்த சக மது பிரியர்கள் ஏண்டா தமிழ்நாட்டை பற்றி தரகுறைவா பேசுறியா எனக்கூறி அவனை எச்சரித்து அனுப்பினார். பின்பு அந்த போதை தம்பதியினர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக்கொண்டே தாக்கி கொண்டே இருந்தனர்.

மேலும் சிறிது நேரம் கழித்து வந்த ஒரு போதை ஆசாமி அருகில் அமருங்கள் என்ன பிரச்சினை நான் தீர்த்து வைக்கிறேன் என்று கூற மீண்டும் இருவரும் தாக்கிக்கொள்ள அவர் தலை தெரிக்க ஓடிவிட்டார் விட்டார். இச்சம்பவத்தால் அவ்வழியே சென்றவர்கள் பொதுமக்கள் முகம் சுழித்து சென்றனர்

Views: - 229

0

0