கள்ளக்காதலுக்கு இடையூறு… கள்ளக்காதலனை ஏவி விட்டு பெற்ற மகனை ஓடஓட வெட்டிக் கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 9:02 pm
Quick Share

தூத்துக்குடியில் கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி விட்டு ஓட ஓட விரட்டி மகனை தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில், சுப்புலட்சுமிக்கு தூத்துக்குடி டிஎம்பி காலனி சேர்ந்த அவரது உறவினரான ஆவுடையப்பனுக்கு தம்பி முறை உள்ள உறவினரான சுடலைமணி என்பவர் உடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அது கள்ள காதலாக மாறியுள்ளது.

இதை ஆவுடையப்பன் கண்டித்துள்ளார். இதை அடுத்து சுப்புலட்சுமி குடும்பத்தினரை விட்டு பிரிந்து கள்ளக்காதலன் சுடலை மணியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இதன் காரணமாக, ஆத்திரமடைந்த ஆவுடையப்பனின் மகனான கணேஷ், சுடலைமணியின் வீட்டிற்கு சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது தாயின் கள்ளக்காதலை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, நேற்று இரவு கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகன் கணேசை, சுடலைமணி துணையுடன் தாய் சுப்புலட்சுமி கொலை செய்ய திட்டமிட்டு டி.எம்.பி காலனிபகுதியில் பைக்கில் சென்ற கணேசை, சுடலை மணி உள்ளிட்ட இரண்டு பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

கள்ளக்காதலுக்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 946

1

0