ஏரியா ‘டான்’ யார் என்பதில் ரவுடிகளுக்குள் மோதல்… இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பல்… பொன்னேரியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 9:42 am
Quick Share

திருவள்ளூர் ; பொன்னேரியில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ரவுடியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அப்புன் என்கிற அப்புன்ராஜ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அங்குள்ள சில ரவுடிகளுக்கும், யார் பெரியவர் என்கிற மோதலில் அப்புன் ராஜ் இரு சக்கர வாகனத்தில் வந்த போது, அவரை வழிமறித்து நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தலை மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் அரிவாளால் வெட்டிவிட்டு ரவுடி கும்பல் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்தில் வீட்டின் அருகே இருந்த அப்புன்ராஜின் மனைவி நதியா பார்த்தபோது, ரவுடிகள் பாலாஜி, கார்த்திக், லோகேஷ், ஜெய் ஆகிய நான்கு பேரும் தப்பி ஓடியதாக அவர் தெரிவித்த தகவலின் பேரில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்…

Views: - 387

0

0