திருச்சியில் துப்பாக்கிச்சூடு… போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடிகள் மீது பாய்ந்த தோட்டாக்கள்..!

Author: Babu Lakshmanan
20 February 2023, 3:39 pm
Quick Share

திருச்சியில் கடத்தல் நகையை மீட்க ரவுடியை அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்ற இரு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி(40) மற்றும் சோமசுந்தரம் (38) என்கிற சாமி இருவரும் சகோதரர்கள். துரைசாமி மீது கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5கொலை வழக்குகள் என 69வழக்குகள் உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும் தஞ்சை புதுக்கோட்டை, அரியலூர். நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளது.

இந்த நிலையில் அவர்கள் திருட்டு வழக்கில் தொடர்புடைய நகைகளை குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அந்த நகைகளை மீட்க காவல்துறையினர் இருவரையும் குழுமாகி அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அவர்கள் இருவரும் காவல்துறையினரை தாக்கி விட்டு அவர்கள் ஜிப்பிலிருந்து இறங்கி தப்பித்துள்ளனர்.

அவர்களை விரட்டி பிடிக்கும் என்ற போது அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்களை கத்தியால் வெட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் குற்றவாளிகளை பிடிக்கவும் இருவரையும் காலில் சுட்டு போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளையும், காவல்துறையினரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 546

0

0