‘வேணாம் விட்டுருங்க… ப்ளீஸ்’… வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை : தடுக்கச் சென்ற மனைவிக்கும் படுகாயம்!!

Author: Babu Lakshmanan
4 August 2023, 10:50 am
Quick Share

தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காவல்வாய் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் மாயாண்டி (31). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாயாண்டி மீது செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் ஆடு திருட்டு, மணல் திருட்டு என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதே போ,ல் கால்வாய் மெயின்ரோடு தெருவைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மகன் தேவகண்ணன் (39). இவர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மாயாண்டி வழக்குகளை தேவகண்ணன் நடத்தி வருகிறார். மாதம் தோறும் நடைபெறும் விசாரணைக்கு மாயாண்டி முறையாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேவ கண்ணன் மாயாண்டியை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக மாயாண்டி வருகை தந்துள்ளார். அப்போது வழக்கு தொடர்பாக பேசுகையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியுள்ளனர். இதில் இருவரும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக மாயாண்டியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆனால் மாயாண்டி திடீரென்று ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை முன்பு நின்ற பேருந்தின் கீழ் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தேவகண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அவரை பேசி சமாதானப்படுத்தி போலீசார் தூத்துக்குடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில், நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் தனது மனைவியிடன் மாயாண்டி இருந்துள்ளார். அப்போது திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த ஒரு மர்ம கும்பல் மாயாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை அவரது மனைவி செல்வி தடுத்துள்ளார். இருவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதியம் நடந்த பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 410

0

0