தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் மோடி.. அவர் வந்தாலே திமுகவுக்கு பிடிப்பதில்லை: அண்ணாமலை பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
10 April 2024, 4:07 pm
annamalai-updatenews360
Quick Share

திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை என்றும், தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை – மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு, கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளர் எல்.முருகன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வசந்தர ராஜன், திருப்பூர் தொகுதி வேட்பாளர் முருகனாந்தம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

மேலும் படிக்க: உங்க மன்னிப்பை ஏற்க முடியாது : தண்டனைக்கு தயாராக இருங்க.. PATANJALI வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!

முன்னதாக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- தமிழ்நாட்டு மக்களோடு இருப்பதற்காகவும், அவர்களோடு இணைந்து செயல்படுவதற்காகவும் பிரதமர் மோடி வருகிறார். திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை ; தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்க்கிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் திமுகவுக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் பிடிப்பது கிடையாது.

தமிழ் மக்களின் ஆசிர்வாதம் பிரதமர் மோடிக்கு தேவை ; தமிழக மக்கள் தங்கள் ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும். இம்முறை திமுகவினர் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலம் வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர். தமிழ் கலாச்சாரத்தை 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி உயர்த்தி பிடித்துள்ளார் ; தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் மோடி.

உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் கலாச்சாரத்தை பண்பாட்டை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் ஆ.ராசா. அதே வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டவர் கனிமொழி, எனக் கூறினார்.

Views: - 113

0

0