ஐஐடி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில் திருப்பம்… பாஜகவை சேர்ந்த 3 நிர்வாகிகள் கைது : அதிரடி ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 4:12 pm
BJP Arrest
Quick Share

ஐஐடி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில் திருப்பம்… பாஜகவை சேர்ந்த 3 நிர்வாகிகள் கைது : அதிரடி ட்விஸ்ட்!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த 2023 நவம்பர் 2ஆம் தேடி அதிகாலை பல்கலை வளாகத்தில் சக மாணவனுடன் பேசிக் கொண்டிருந்தார்

அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் மாணவனை தாக்கி, மாணவியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தனர்.

மேலும் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் குற்றவாளியை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மாணவியை கூட்டு பாலியல் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான குனடல பாண்டே, அபிஷேக் சவுகான், சக்ஷன் படேல் ஆகிய 3 பேரும் பாஜக ஐடி விங் நிர்வாகிகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரின் பதவியை பறித்தும் பாஜகவில் இருந்து நீக்கியும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Views: - 256

0

0