9-வருஷமா டிமிக்கி கொடுத்த கமல்.. கொடுத்த வாக்கை காப்பாத்தல.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

Author: Vignesh
3 May 2024, 7:02 pm
Quick Share

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.

மேலும் படிக்க: சித்தார்த்துக்காக படுக்கையை கூட பகிருவேன்.. சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட நடிகை..!

தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது. எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

kamal haasan

மேலும் படிக்க: போதையில் கரெக்டா பண்ண முடியும்.. படுக்கை அறைக்காட்சி குறித்து பேசிய மனிஷா கொய்ராலா…!

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தக்லைஃப் படத்தில், திரிஷா, கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், கல்கி படத்தில் 15 நிமிடத்திற்கே வரும் காட்சிக்காக கமல்ஹாசன் பல கோடி சம்பளம் வாங்குகிறாராம் கமல். அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி வரை அவர் சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடியா என வாய் பிளந்துள்ளனர்.

Thug Life

மேலும் படிக்க: தாமரை விரியனும்.. பிரபல நடிகையின் தாயார் பளீச் பேட்டி..!(Video)

இவ்வாறு பிசியாக நடித்து வரும் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்று எழுந்துள்ளது. அதாவது, கமல் நடித்த உத்தமன் வில்லன் படம் 2015ல் வெளிவந்தது. ஆனால், மக்களிடம் வரவேற்பை பெறாமல், பெரிய தோல்வி அடைந்தது. அதனால், அந்த படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து கடனில் மூழ்கியது.

uttama villain

மேலும் படிக்க: அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்.. வைரலாகும் ஃபேமிலி கிளிக்ஸ்..!

தங்களுக்கு விருப்பம் இல்லாத கதையை எடுத்து கமல் நஷ்டத்தை ஏற்படுத்தினார். படம் பார்த்துவிட்டு நாங்கள் சொன்ன திருத்தத்தையும் அவர் செய்யவே இல்லை. என்று, லிங்குசாமி முன்பே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அந்த நஷ்டத்திற்கு, ஈடு செய்யும் விதமாக இன்னொரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கமல் எழுத்து பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்பது வருடங்களாகியும் இன்னும் கமல் கால்ஷீட் கொடுக்கவில்லை, இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி தற்போது புகார் கொடுத்து இருக்கிறார். கமல் ஒப்புக்கொண்டது போல கால்ஷீட் வாங்கி தர வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.

Views: - 85

0

0