ஷூட்டிங்கில் மது அருந்திய சாக்லேட் பாய்.. போதையில் நடந்ததை வெளிப்படையாக கூறிய மாதவன்..!

Author: Vignesh
18 March 2024, 6:57 pm
madhavan-updatenews360
Quick Share

90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் , ரன் , அன்பே சிவம் , ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று , விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் இந்தியில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மாதவன் முதலில் நடித்த அலைபாயுதே திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால் அடுத்தது என்னவளே படத்தில் நடித்திருந்தார். அலைபாயுதே ஹிட் ஆன உடனே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து தயாரிப்பாளர்கள் மாதவனை புக் செய்தார்கள்.

madhavan-updatenews360

அவரது அழகும், நடிப்பும் குறிப்பாக பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது. அலைபாயுதே திரைப்படம் வெளியான சமயத்தில் ஷாலினி – மாதவனின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. அப்படத்தை காண காதல் ஜோடிகள் திரையரங்கிற்கு படையெடுத்தார்கள். குறிப்பாக மாதவனின் அழகுக்கே பெண் ரசிகைகள் ஏராளமானோர் அவரை உருகி உருகி காதலித்ததுண்டு.

madhavan 3 idiots

சமீபத்தில் ஒரு பேட்டியில் மாதவன் தான் குடிபோதையில் ஒரு படத்தில் நடித்தது பற்றி பேசி இருக்கிறார். அமீர்கான் உடன் 3 இடியட்ஸ் படத்தின் ஒரு காட்சியில் தான் அப்படி நடந்ததாம். குடித்திருப்பது போல் நடிப்பதற்கு பதில் நிஜமாகவே குடித்து விடலாம் என அமீர்கான் கூறியதால், ஷூட்டிங் தொடங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் குடித்துவிட்டார்களாம். குடித்துவிட்டு நார்மலாக இருப்பது போல் நடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் வசனத்தை பேச முடியாமல் மாதவன் தள்ளாடினாராம்.

Views: - 62

0

0