16 வருட திருமண வாழ்க்கையை சுக்குநூறா உடைத்த சரத்குமார் – முன்னாள் மனைவி வேதனை!

Author: Shree
25 July 2023, 10:03 am
sarathkumar
Quick Share

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது முன்னாள் மனைவியுடன் நட்பாக பழகி வருகிறார் சாத்குமார். இந்நிலையில் சரத்குமாருடன் விவாகரத்து குறித்து பேசியுள்ள முன்னாள் மனைவி சாயாதேவி, விவாகரத்து வாழ்க்கை என்பது உண்மையில் மிகவும் வருத்தத்தை தரக்கூடியது தான். நானும் சரத்குமாரை விவாகரத்து செய்தபோது நிறைய கஷ்டத்தை அன்பவித்தேன். குறிப்பாக பிள்ளைகள் வளர்பதில் சிரமம்.

விவாகரத்து பெற்று பிரியும் போது சிறு குழந்தை அப்பா வேண்டுமா அல்லது அம்மா வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதுமிகவும் தவறு. குழந்தைக்கு தாய் தந்தை இருவரும் முக்கியம் தான் என அவர் கூறினார். மேலும், நான் தற்போது என் மகள் வரலக்ஷ்மியுடன் சேர்ந்து பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சேவ் சக்தி என்ற பெண்களுக்கான அறக்கட்டளை மூலம் பல பெண்களுக்கு உதவிகள் செய்து வருகிறேன் என சாயாதேவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Views: - 688

0

0