குஷ்புவுக்கு முன் பிரபல நடிகையை காதலித்த சுந்தர்.சி… அது மட்டும் நடந்திருந்தால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பாங்க!

Author: Rajesh
20 December 2023, 5:58 pm
sundhar c
Quick Share

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான சுந்தர் ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். இன்றும் தொடர்ந்த கமர்ஷியல் படங்களை தந்து கொண்டிருக்கும் அவர் ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் “முறை மாமன்” என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் பிரபல நடிகர்களான கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார், மற்றும் அஜித்குமார் ஆகியோருடைய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் முதலில் நடிகை சௌந்தர்யாவை தான் ஒருதலையாக காதலித்தேன். அவரிடம் காதலை சொல்வதற்கு முன் வாழ்க்கையில் குஷ்பு வந்துவிட்டார். ஒருவேளை குஷ்பு வராமல் இருந்திருந்தால் நான் நடிகை சௌந்தர்யாவை தான் திருமணம் செய்திருப்பேன் என வெளிப்படையாக பேசினார். இதை நான் குஷ்புவிடமே பலமுறை கூறியுள்ளேன் என சுந்தர் சி தெரிவித்தார்.

Views: - 262

0

0