இக்கட்டான பிரச்சனையில் கைவிட்ட கேப்டன் – இறுதி சடங்கிற்கு கூட வராததற்கு காரணம் இது தான்!

Author: Rajesh
16 February 2024, 10:41 pm
vijayakanth
Quick Share

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.

தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் அஜித்தையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆம், பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித் தான் முதலில் நடிக்கவிருந்தது. ஆனால், அப்படத்தில் அஜித்தை கொடுமைப்படுத்தியதோடு, அவரை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.

இதனால் தான் அப்படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும், தயாரிப்பாளரிடம் ஏற்பட்ட பிரச்சனை அஜித்திற்கு தலைவலியாக இருந்ததால் எவ்ளோவ் பெரிய ஹிட் அடிச்சாலும் பரவாயில்ல நான் இந்த படத்தில் நடிக்கல என கூறி விலகிவிட்டாராம். இந்த சம்பவத்தின் போது அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் பாலாவிடம் இது குறித்து எதுவுமே விசாரிக்காமல் அஜித்தை கைவிட்டுவிட்டாராம்.

அதனால் அஜித்திற்கு கேப்டன் மீது கடுங்கோபம் இருந்ததாம். இதனால் அவர்கள் பேசிக்கொள்ளவில்லையாம். அதனால் தான் கேப்டனின் இதில் சடங்கில் கூட அஜித் பங்கேறக்காமல் இருந்துள்ளார் அது மட்டும் இலலாமல் ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் அஜித் ஆறுதலும் சொல்லவில்லை என வலைப்பேச்சு சக்திவேல் கூறியுள்ளார்.

Views: - 252

0

0