கைம்பெண்ணை கைக்கோர்த்த கணவரின் நண்பர் : இப்படியும் வாழலாம் என்பதை நிரூபித்த நெகிழ வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 1:25 pm
Widow Remarriage - Updatenews360
Quick Share

பெங்களூரு : கணவரை இழந்த கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த கணவரின் நண்பரின் செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியில் உள்ளது முள்ளூர் என்ற கிராமம். இங்கு சேத்தன்குமா என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

41 வயதான சேத்தன்குமாருக்கும், 30 வயதான அம்பிகாவுக்கு 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்த சேத்தன்குமார் கொரோனா 2வது அலையின் போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

அப்போது தனியார் மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த சேத்தன்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும் பரிதாபமாக சேத்தன்குமார் உயிரிழந்தார்

கணவரின் மரணம் அம்பிகாவை மன உளைச்சலுக்கு தள்ளியது. எத்தனையோ ஆறுதல்கள் கூறியும் கணவரின் மரணத்தை ஜீரணிக்க முடியாத அம்பிகா தற்கொலைக்கு முயன்றார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சேத்தன்குமாரின் நண்பர் லோகேஷ், அம்பிகாவை காப்பாற்றினார். அவருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அம்பிகாவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த லோகேஷ், பெற்றோர்களிடம் கூறினார்.

இதற்கு அம்பிகாவின் சம்மதம் முக்கியம் என கருதி அவரிடம், இருதரப்பு பெற்றோர்களும் வலியுறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்த அம்பிகா, பின்னர் கணவரின் நண்பரான லோகேஷை மணம்முடித்தார்.

பெங்களூருவில் நடந்த திருமணத்திற்கு வந்த நண்பர்கள் லோகேஷை மனதார பாராட்டடினர். கைம்பெண்ணாக இருந்த நண்பரின் மனைவியை நண்பனே மறுமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 1020

0

0