நிலம் வழங்காத வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கிய என்எல்சி : RTI அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 8:58 pm
NLC - Updatenews360
Quick Share

என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நலச்சங்கம் சார்பாக, குப்புசாமி என்பவர் என்.எல்.சி-யில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள் என கேட்டுள்ள நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சட்டத்தில் 08-01-1990-ல் இருந்து 12-03-2012 அவரை 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலை RTI அளித்துள்ளது.

அதில் 862 பேரில், 834 பேர் மட்டுமே நிலம் கொடுத்தவர்களில் தமிழர்கள் என்றும், மீதமுள்ள 28 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்ட விபரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

குப்புசாமி என்பவர் என்.எல்.சி-க்கு நிலத்தை கொடுத்த தனக்கு வேலை வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் வேலை கிடைக்காத காரணத்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டுள்ள நிலையில், இந்த தகவலை பெற்றுள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தான் வடமாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த தகவல் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளது. ஆனால், இதுகுறித்து என்.எல்.சி தரப்பில் எந்த தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 327

0

0