ஜிம்மில் இரு வாலிபர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை… கஞ்சா போதையில் நிகழ்ந்த சம்பவமா..? திருவள்ளூரை உலுக்கிய பயங்கரம்!!

Author: Babu Lakshmanan
1 September 2023, 2:04 pm
Quick Share

திருவள்ளூரில் உடற்பயிற்சி கூடத்தில் இரு வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் அருகே உடற்பயிற்சி கூடத்தில் வெட்டுக் காயங்களுடன் மூன்று பேர் உள்ளதாக நேற்று இரவு 1.30 மணி அளவில் செங்குன்ற போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவல் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, அங்கு இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே சடலமாக இருந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்தார். இரண்டு பேரின் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த ஒருவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர விசாரணையில் சோழவரம் அடுத்த பெருங்காவூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் (20) விஜய் (26) இருவர் கொலை செய்யப்பட்டுள்ளது என்றும் படுகாயம் அடைந்தவர் அஜய் (27) முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கண்ணம்பாளையம் கிராமத்துக்கும், கொலை செய்யப்பட்டு உயிர் இழந்த பெருங்காவூர் கிராமத்திற்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. இளைஞர்கள் இந்த இடத்தில் எப்படி வந்தார்கள்..? யார் அழைத்து வந்தார்கள்..? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்தனரா..? அல்லது இரு தரப்பு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்தனரா..? என்ற கோணத்தில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 469

0

0