முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் பெயரை பயன்படுத்தி ரூ.77 லட்சம் மோசடி… பெண் ஊராட்சி தலைவி பரபரப்பு புகார்..

Author: Babu Lakshmanan
28 October 2022, 9:37 am
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக பெண் ஊராட்சி தலைவியின் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் நரியம்பட்டு ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் பாரதி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், மாசு காட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு முதல்வர் மருமகன் சபரீசன் தான் ஆள் போடவுள்ளதாகவும், அப்பதவியை தனக்கு வாங்கி தருவதாகவும் கூறி, கடந்த மாதம் கைதான போலி ஐஏஎஸ் சசிகுமாரும், புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோரும் தன்னிடம் 77 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக பெண் ஊராட்சி தலைவி அளித்த புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 356

0

0