ஓடும் ரயிலில் நடந்த சொத்து தகராறு.. கண்ணிமைக்கும் நேரத்தில் சினிமா காட்சிகளை போல நடந்த சம்பவம் : சென்னை அருகே ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 5:34 pm
Train Murder - Updatenews360
Quick Share

ஓடும் ரயிலில் நடந்த சொத்து தகராறு.. கண்ணிமைக்கும் நேரத்தில் பயணி கத்தியால் குத்திக் கொலை : சென்னை அருகே ஷாக்!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி கொரியர் ஊழியர். இவரின் சின்னம்மா மகன் ரவீந்திரன் என்பவர் அவருடன் வந்து சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்படவே அவர் அத்திப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது அருகில் இருந்த அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே செல்லும் போது அவரை ஓடும் ரயிலில் கத்தியால் குத்தி அங்கேயே கொலை செய்தார்.

அங்கிருந்த ரயில் பயணிகள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ரவீந்தரனை அனைவரும் சேர்ந்து பிடித்து கொருக்குப்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உயிரிழந்த முரளியின் சின்னம்மா மகன் ரவீந்திரன் சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்து விட்டு தப்பியோட முயன்றது ரயில்வே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 275

0

0