தண்டவாளத்தில் கிடந்த ஐஐடி மாணவரின் சடலம்… விசாரணையில் பகீர் : சென்னையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2023, 4:28 pm
Body Found - Udpatenews360
Quick Share

தண்டவாளத்தில் கிடந்த ஐஐடி மாணவரின் சடலம்… விசாரணையில் பகீர் : சென்னையில் பரபரப்பு!!

சென்னையில் ஐஐடியில் படித்து வந்த மாணவர் ஒருவரின் உடல், ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய ரயில் தண்டவாளத்தின் அருகே, சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மாணவர் டெல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு ரயிலில் திரும்பியுள்ளார். ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாக கூறப்படும் நிலையில் மாணவன் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் இறந்தவர் பி.டெக் மெட்டலர்ஜிகல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் என்று கூறியுள்ள ஐஐடி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Views: - 398

0

0