இயக்குநர் வெங்கட் பிரபு கைது? பரபரப்பில் திரையுலகம்.. நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 6:56 pm
Venkat Prabhu - Updatenews360
Quick Share

இயக்குநர் வெங்கட் பிரபு கைது? பரபரப்பில் திரையுலகம்.. நடந்தது என்ன?

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கைது என்றும், சிறிது நேரம் காத்திருங்கள் அதன் பிறகு முழு விபரம் தெரிய வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கங்கை அமரனின் மகனாவார். கலையுலகத்தில் இருந்து வந்ததால் சுலபமாக சினிமாவில் நுழைந்தார்.

ஆரம்பத்தில் நடிகராக இருந்த வெங்கட் பிரபு பின்னர் சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். பின்னர் மங்காத்தா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்.

சமீபத்தில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

கஸ்டடி என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வெங்கட்பிரபு கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு கைது என்றும், சிறிது நேரம் காத்திருங்கள் முழு விபரம் பிறகு என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 268

0

0